தொடங்கியது மக்கள் ஊரடங்கு: இந்தியா முழுவதும் சாலைகள் முழுவதும் வெறிச்சோடியது

பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊடரங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையடுத்து இன்று நாடு முழுவதும் கடைகள், டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும், மெட்ரோ ரயில், பயணிகள் ரயில், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், ஆட்டோ, கால் டாக்சி, லாரிகளும் ஓடாது என்றும் சில உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

ஆனாலும், அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்டவை இன்று திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மக்கள் ஊரடங்கை காலை முதலே இந்தியாவின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி உள்ளது. சென்னையை பொருத்தவரை அண்ணா சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் ஐந்து சதவீத போக்குவரத்து கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply