பூவா தலையா, பட்டணத்தில் பூதம், போன்ற படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சினிமாவில் அறிமுகமாகிறார்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர், புதிய திரைபடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி இயக்குனராக இருந்த பிரபாகரன் இயக்கவிருக்கும் திரைபடத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சஞ்சய் சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளர்.
“விரைவில் இசை” என்ற பெயரில் வளர்ந்து வரும் இந்த படத்தில் இசையமைப்பாளராக எம்.எஸ்.ராம் என்பவர் அறிமுகம் ஆகிறார். விழா படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஹீரோ, வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த ஜெய்சங்கரின் வாரிசு கோலிவுட்டில் அறிமுகம் ஆவதை ஒட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.