its-shahrukh-khan-for-kochadaiyaan-audio-launch-700x480

கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழா வரும் 9ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த நிலையில் விழாவுக்கு வருவதாக ஒப்புக்கொண்ட அமிதாப்பச்சனின் வருகையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமிதாப் தன்னால் வரமுடியாத நிலைமையை ரஜினியிடம் தொலைபேசியில் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ரஜினி சற்று அதிர்ச்சி அடைந்தாலும், உடனடியாக சுதாரித்துக்கொண்டு, அமிதாப்புக்கு பதிலாக பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானை தொலைபேசியில் அழைத்து ஆடியோ விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தனது ‘ரா ஒன்’ படத்திற்கு ரஜினி சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்த உதவியை மனதில் கொண்ட ஷாருக்கான், உடனடியாக நாளை மறுநாள் நடக்க இருக்கும் விழாவுக்கு வருகை தர ஒப்புக்கொண்டார். இதனால் ரஜினியும், இயக்குனர் செளந்தர்யாவும் சற்று நிம்மதி அடைந்தனர்.

கோச்சடையான ஆடியோ விழா திட்டமிட்டபடி நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் என்றும், விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமிதாப்புக்கு பதிலாக ஷாருக்கான வருகை புரிவவர் என்றும் செளந்தர்யா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply