முடிவுக்கு வருகிறதா தமிழ் சினிமாவின் போராட்டம்?
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை, படப்பிடிப்பு இல்லை என்பது உள்பட தமிழ் சினிமா உலகம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த போராட்டத்தின் பயனாக புதிய டிஜிட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம், திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை என தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவான செயல்கள் நடந்து வருகிறது.
மேலும் தமிழக அரசின் தலைமையில் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டால் வரும் தமிழ்ப்புத்தாண்டு முதல் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.