shadow

isis terroristsஈராக் நாட்டின் அரசாங்கத்தையே நிலைகுலைய செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் பிரச்சார வீடியோ ஒன்று தமிழில் வெளியாகியுள்ள்து குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிரசார வீடியோ, ஆங்கிலம், ஹிந்தி, உருது, தமிழ் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒருசில இணையதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழக இளைஞர்களின் மத்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து பிரசாரம் செய்யவே இந்த வீடியோ தமிழில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த தமிழ் வீடியோவை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் இளைஞர்களின் மத்தியில் தீவிரவாதத்தை புகுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோ இருப்பதால், இந்த வீடியோவை உடனடியாக தடை செய்யவேண்டும் என்று வலைத்தள அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ் மொழிபெயர்ப்பு எங்கு, யாரால் செய்யப்பட்டது என்பது குறித்த விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply