shadow

isis 1

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாதம் செய்து வரும் ஐ.எஸ்.ஐ.ஐ இயக்கத்தினர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பிணைக்கைதிகளை கழுத்தை அறுத்து கொலை செய்துகொண்டிருந்த தீவிரவாதிகள் சமீபத்தில் பிடிபட்ட ஒருவரை உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு அதன்பின்னர் கல்லால் எறிந்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர்களின் நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்ததை அடுத்து ஈராக்கில் உள்ள ராக்கா என்ற மாகாணத்தில் இந்த அதிர்ச்சி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குற்றவாளியின் கண்களை கட்டி மாடிக்கட்டிடத்தின் மேல்மாடியில் இருந்து குற்றவாளியை தூக்கி எறிந்தனர். கீழே தயார் நிலையில் நின்றிருந்த அந்த இயக்கத்தினர்கள் குற்றவாளியின் மீது சரமாரியாக கல்லால் எறிந்ததால் சிறிது நேரத்தில் அந்த குற்றவாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்டுமிராண்டித்தனமான இந்த தண்டனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 isis 2 isis 3 isis 4 isis 5 isis 6

Leave a Reply