தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று காலை 7மணி முதல் அமைதியாக நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென நண்பகல் 12 மணியளவில் விஷால் மற்றும் சரத்குமார் அணிகளிடையே திடீரென மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் விஷால் தாக்கப்பட்டதாகவும் அவருடைய இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகர் அல்லாத ஒருவர் தன்னை தாக்கியதாகவும் எந்த தாக்குதல் நடந்தாலும் தேர்தல் தொடர்ந்து நடக்கும் என்றும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும் விஷால் கூறியுள்ளார்.
நடிகை ஒருவர் ஓட்டு போட வரும்போது சரத்குமார் அணியினர் அந்த நடிகையை தள்ளிவிட்டதாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக விஷால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.