எழுத்தாளர்களின் ஏமாற்றத்திற்கு விஜயகாந்த் காரணமா?
மக்களுக்காக மக்கள் பணி’ என்ற பெயரில் தேமுதிக பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில், சமீபத்தில் எழுத்தாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக அறிவித்துவிட்டு வெறும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள உதவிகளே தங்களுக்கு கிடைத்ததாக எழுத்தாளர்கள் புலம்பி வருகின்றனர்.
கடந்த 30-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர்களுக்கு 20 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தேதிமுக தலைவர் விஜயகாந்த் வழங்கினார். வெள்ளி டாலர், தங்க காயின், ஸ்கூல் பேக், புடவை, ஷீல்டு என விஜயகாந்த் வழங்கிய பொருட்களின் மதிப்பு ரூ. 5ஆயிரம் தான் இருக்கும் என்றும் ஆனால் தேமுதிகவினர் இவற்றை ரூ. 20ஆயிரம் மதிப்பு உடையது என கூறி தங்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேமுதிக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பரமசிவம் கூறியபோது நலத்திட்ட உதவிகளுக்கான ஏற்பாட்டிலும் குளறுபடி நடந்ததால்தான், முன்னாள் மாவட்ட செயலாளர் டெல்லி.சாமிநாதனை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, என்ன மாவட்ட பொறுப்பாளராக அறிவித்துள்ளார் கேப்டன். இனிமேல் எல்லாம் சரியாக நடக்கும்” என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.