விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ படம் வரும் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ள நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் வரும் ஜூலை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் விஜய்-அட்லி திரைப்படம் விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படம் மெளன ராகம் படத்தையொட்டி இருந்ததாக புகார் கிளம்பியுள்ள நிலையில் இந்த படமும் சத்ரியன் படத்தை தழுவியது என்ற செய்தி கசிந்துள்ளதால் படக்குழுவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீஸாக விஜய் நடிப்பது, இரண்டு ஹீரோயின்கள், அப்பாவாக விஜய் நடிப்பது ஆகிய செய்திகள் சத்ரியன் படத்தின் கதையோடு ஒத்து வருவதால் இந்த வதந்தி கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
சத்ரியன் படத்தில் விஜயகாந்த் காட்டிய ஆவேசம், அதிரடி ஆகியவற்றை விஜய் எந்த அளவுக்கு தனது ரசிகர்களுக்கு அளிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.