தாய்லாந்து நாட்டில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக உயிரை பணயம் வைத்து முதலையின் வாய்க்குள் தலையை விட்டு நிகழ்த்தும் காட்சியை காண அதிகளவிலான சுற்றுப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் சாம்ப்ரான் மிருகக்காட்சி சாலையில் இரண்டு இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து முதலையின் வாய்க்குள் தலையை விட்டு அத்ரிச்சி தரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். இதற்கு நுழைவுக்கட்டணமாக பத்து அமெரிக்க டாலர் வசூலிக்கப்படுகிறது.
இந்த மிருகக்காட்சி சாலையில் பணிபுரியும் இரண்டு தைரியமான இளைஞர்கள் முதலையின் வாய்க்குள் தங்கள் தலையையும் கைகளையும் உள்ளே விட்டு பார்வையாளர்களை அதிசயிக்க வைக்கின்றனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கையில் இல்லாமல் இவர்கள் நடத்தும் காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக இந்த மிருகக்காட்சி சாலைக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது. இந்த இளைஞர்களின் அதிர்ச்சி தரும் செயல்களை கீழே உள்ள வீடியோவில் கண்டு நீங்களும் அதிசயிக்கலாம்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1Cs8QIU” standard=”//www.youtube.com/v/OXBPCwzPrhE?fs=1″ vars=”ytid=OXBPCwzPrhE&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9876″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.