விஜய் மல்லையா தப்பிச்செல்ல சுப்பிரமணிய சுவாமி உதவியா? திடுக்கிடும் தகவல்
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்றுள்ள விஜய் மல்லையாவுக்கு சுப்பிரமணிய சுவாமி உதவினாரா? என்பது எங்களுக்கு தெரிய வேண்டும் என்றும், இதற்கு பிரதமர் மோடியும் உடந்தையா? என்பதை விளக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரமோத் திவாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”விஜய் மல்லையாவுக்கும், சுப்பிரமணியன் சுவாமிக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. சுவாமி நடத்தி வந்த ஜனதா கட்சியில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை விஜய் மல்லையா தேசிய செயல் தலைவர் பதவியில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக விஜய் மல்லையா நாட்டைவிட்டு தப்பி செல்ல சு.சுவாமி உடந்தையாக இருந்திருக்கலாம் என்றும், அவ்வாறு சு.சுவாமி செய்த உதவிக்கு பிரதமர் ஆதரவு அளித்தாரா? என்ற உண்மை எங்களுக்கு தெரிய வேண்டும் என்றும் பிரமோத் திவாரி கூறியுள்ளார்.
மேலும் விஜய் மல்லையா நாட்டை விட்டு செல்வதற்கு முன்னர் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்ததாகவும் செய்தி வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.