சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நாளை மறுநாள் ரிலீஸாகவுள்ளது. நேற்று முதல் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியதும் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முதல் நாளிலேயே படத்தை பார்க்க டிக்கெட்டுக்களை போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அஞ்சான்’ படத்திற்கு பிறகு சூர்யாவின் மாஸ்’ திரைப்படத்திற்கு அதிகபட்ச எதிர்பார்ப்பு நிலவுவதாகவும், பள்ளிக்கு திறப்பதற்கு முன் வெளியாகும் படம் என்பதாலும் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை இந்த படம் தரும் என தியேட்டர் அதிபர்களும் விநியோகிஸ்தர்களும் எதிர்பார்த்து அதிக விலை கொடுத்து இந்த படத்தின் உரிமை பெற்று வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு சூப்பர் பவர் இருப்பதான காட்சிகள் இருப்பதாக் இந்த படத்தை வெளியிட தடை விதிப்பதாக குவைத் நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதனால் குவைத்தில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.