ராகுல் காந்தியை தீவிரமாக முன்னிறுத்தப்படுவதால் அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெறுகிறார் என்று செய்திகள் எழுந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வருகிற 2016-ம் ஆண்டில் தனக்கு 70 வயது ஆகும் போது அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும், இதனால்தான் ராகுல் காந்திக்கு கட்சியில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் ஒரு புத்தகத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த கருத்தை காங்கிரஸ் மறுத்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறுகையில்;  ‘‘நான் அந்த செய்தியை படிக்கவில்லை. செயல்திறன்மிக்க சோனியா காந்தி தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். எனவே யாரும் அப்படி எதிர்பார்க்க முடியாது’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply