பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் ராம்கோபால் வர்மா கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராம்கோபால் வர்மா இயக்கி வரும் அட்டாக்’ படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டபோது தெலுங்கானா மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், ஐதராபாத் போலீஸ் ஜீப்பில் அவர் உட்கார்ந்திருப்பது போன்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உண்மையில் ராம்கோபால் வர்மா கைது செய்யப்பட்டாரா? அல்லது படப்பிடிப்பின் ஒரு பகுதியா என்பது உறுதிப்படுத்தாத நிலையில் சில நிமிடங்களில் ராம்கோபால் வர்மா போலீஸ் ஜீப்பின் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருப்பது போன்ற இன்னொரு புகைப்படமும் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது. ராம்கோபால் இயக்கி வரும் ‘அட்டாக்’ படத்தின் விளம்பரத்திற்காக செய்யப்பட்ட ஸ்டண்ட் என்று கூறப்பட்டு வந்தபோதிலும் இதுகுறித்த முழுவிபரங்கள் இன்னும் வெளியாகவில்லை
மஞ்சு மனோஜ், சுரபி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் அட்டாக்’ படத்தில் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, நவீன் ஆகியோர்களும் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக சமீபத்தில் 1000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை வைத்து பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.