ராஜினாமா செய்துவிட்டாரா ஓபிஎஸ்?
தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா பதவியேற்க வேண்டும் என்று தொடரந்து அதிமுகவின் அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர். நேற்று அக்கட்சியின் முக்கிய தலைவரான தம்பித்துரையும் இதை வலியுறுத்தினார்.
இதனால் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்துவிட்டதாக பிரபல இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய முதல்வராக சசிகலா இன்னும் ஓரிரு நாட்களில் பதவியேற்பார் என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.