காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, நீதானே என் பொன்வசந்தம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன், தற்போது அஜீத் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அஜீத் 55 என்றும், தல 55 என்றும் அவரது ரசிகர்கள் அந்த படத்தை தற்போது அழைத்து வருகின்றனர்.
இந்த படத்தில் அஜீத்துக்கு த்ரிஷா மற்றும் அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர். அஜீத்துக்கு ஜோடியாக முதலில் அனுஷ்கா மட்டுமே நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன்பின்னர் ஒரு சிறு வேடத்தில் அதாவது பிளாஷ்பேக் வேடத்திற்காக மட்டும் த்ரிஷா இந்த படத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால் கவுதம் மேனனுடன் ஏற்கனவே ‘விண்ணை தாண்டி வருவாயா’ என்ற படத்தில் கொண்டிருந்த நட்பால், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இயக்குனர் கவுதம்மேனன், த்ரிஷாவின் பகுதிகளை விரிவுபடுத்தியாக கூறப்படுகிறது. இது அஜீத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், இதனால் அஜீத் மற்றும் கவுதம் மேனன் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் நேற்று மாலை முதல் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில் பல ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எதையும் கண்டுகொள்ளாமல் அஜீத் 55 படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக அஜீத், தான் நடிக்கும் திரைப்படத்தில் இயக்குனர் எடுக்கும் முடிவை விமர்சனம் செய்வதில்லை. அதனால் அவர் கவுதம் மேனனுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும், இந்த வதந்தி எங்கிருந்து பரவியதே என்று தெரியவில்லை என்றும் அஜீத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் தான் நினைத்ததை விட மிக சிறப்பாக அமைந்திருப்பதாக அனுஷ்கா தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.