‘அஜித் 57’ படத்தின் வில்லன் அபிஷேக்பச்சனா? தயாரிப்பாளரின் பதில்
தல அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒருசில இணையதளங்களில் செய்தி வெளியாகியது.
இந்த செய்தி குறித்து ‘தல 57’ படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் கூறும்போது இந்த படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் உள்பட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை யாரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
பேச்சுவார்த்தை முடிந்தபின்னர் முறைப்படி இந்த படத்தின் வில்லன் அறிவிக்கப்படுவார். அதுவரை ஊடகங்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.