shadow

12காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அசாமில் ஜோரத் என்ற இடத்தில் கடந்த மாதம் 26–ந் தேதி பெண்களுடன் கலந்துரையாடியபோது பொண்டி சுட்டியா என்ற பெண், அவரை கன்னத்தில் முத்தமிட்டார். அந்தக் காட்சி,அனைத்டு ஊடகங்களிலும் பிரபலப்படுத்தபட்டது.

இதையடுத்து வீடு திரும்பிய அந்த பெண்ணுக்கும் அவரது கணவர் சோமேஷ்வர் சுட்டியாவுக்கும் இடையே பிரச்சானி ஏற்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த பொண்டி சுட்டியா தீக்குளித்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த கணவரும், படுகாயம் அடைந்தார்.

இந்த நிலையில், ராகுலை முத்தமிட்ட பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராகுல் காந்தி, அசாம் முதல்–மந்திரி தருண் கோகாய், மாநில காங். தலைவர் புவனேஷ்வர் கலிதா ஆகியோர் மீது ‘நரி முக்தி சங்கராம் சமிதி’ என்ற அமைப்பு ஜோரத் போலீஸ் நிலையத்தில் நேற்று அதிரடியாக புகார் செய்தது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமன்ஜித் கவுர் கூறுகையில் “ராகுல் மீது கூறப்பட்ட புகாரை வாங்கி பரிசீலனை செய்து வருகிறோம். இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply