ஜப்பான் திரைப்பட விழாவில் ‘இறுதிச்சுற்று’க்கு கிடைத்த மரியாதை
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாதவன் தமிழில் ரீஎண்ட்ரி ஆகி நடித்த படம் ‘இறுதிச்சுற்று’. பெண் இயக்குனர் சுதா இயக்கத்தில் நிஜ பாக்ஸர் ரித்திகாசிங் நடித்த இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மாபெரும் வசூலை பெற்றது. இந்நிலையில் இந்த படம் தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் 29வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் தேர்வு பெற்றுள்ளது. இந்த செய்தியை படக்குழுவினர் டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் நடித்த ரித்திகாசிங் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் மாதவன் கேரக்டரில் வெங்கடேஷ் வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.