shadow

8முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கொல்கத்தாவின் முதல் குளுகுளு பேருந்து நிலையம் அடுத்தவாரம் கொல்கத்தாவில் திறக்கப்படவுள்ளது.

தெற்கு டம்டம் நகராட்சியில் உள்ள லேக் டவுன் பேருந்து நிலையம் நாட்டின் முதல் ஏ.சி. பேருந்து நிலையம் என்ற பெருமையை பெறுகிறது.  

முழுக்க முழுக்க கண்ணாடியிலான அறையில் கண்கவரும் இருக்கைகளுடன் இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த குளிர்சாதன பேருந்து நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை பராமரிக்க ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் கொல்கத்தாவில் மேலும் பல பேருந்து நிலையங்களை குளுகுளு வசதி செய்ய இந்த பேருந்து நிலையம் ஒரு முன்மாதிரியாக அமையும் என தான் கருதுவதாக டம்டம் நகராட்சி துணைத் தலைவர் சுஜித் போஸ் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இதுபோன்று பல பேருந்து நிலையங்கள் குளுகுளு வசதி செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply