ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தென்கிழக்கிலுள்ள அமில் பகுதியில் சந்தை உள்ளது. இங்கு பொருள்களை வாங்கிச் செல்ல மக்கள் அதிகமாக வருவர். இந்தப் பகுதியில் அதிகாலையில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply