shadow

ஈரான் நாட்டின் அணுவிஞ்ஞானிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்

iran-scientistஈரான் நாட்டை சேர்ந்த அணு விஞ்ஞானி ஷாராம் அமிரி தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அவரது குடும்பத்தினர்களும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஈரான் அரசு தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாகவும், ஈரான் நாட்டின் அணு ஆய்வு ரகசியங்களை அமெரிக்காவுக்கு மறைமுகமாக அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டி அந்த குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டதால் இவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஞ்ஞான் ஷராமுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடப்பட்ட விஞ்ஞானி ஷாராம் உடலை அவரது சொந்தக் கிராமத்தில் இருக்கும் அவருடைய தாயார் பெற்றுக் கொண்டதாகவும், ஷாராம் அம்ரியின் கழுத்தில் தூக்குக் கயிற்றின் அடையாளம் இருந்ததை வைத்தே அவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தாம் கருதுவதாகவும் அவருடைய தாயார் தெரிவித்தார்.

Leave a Reply