shadow

ஐ.பி.எல். கிரிக்கெட்: 2வது பிளே ஆப் சுற்றில் ஐதராபாத் வெற்றி

cricket3ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பிளே ஆப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு ஐதராபாத் அணி தகுதி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறுகிறது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது பிளே ஆப் சுற்றில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. யுவராஜ்சிங் 44 ரன்கள் எடுத்தார்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி, முதல் பிளே ஆப் போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் அணியும் நாளை மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியுடம் மோதும்

Leave a Reply