ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர்: கொல்கத்தா வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ஐந்து பந்துகள் மீதமிருக்கையில் கொல்கத்தா அணி, பெங்களூர் அணியை வென்றது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா, பெங்களூர் அணியை முதலில் பேட்டிங் செய்ய கோரியது. இதனால் முதலில் களத்தில் இறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்கலில் 7 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்கள் குவித்தது. ராகுல் மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி தலா 52 ரன்கள் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெய்லே 7 ரன்களில் அவுட் ஆனார்.
இந்நிலைய்ல் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் யூசுப் பதான் மிக அபாரமாக விளையாடி 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். ரூசல் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.