ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத், கொல்கத்தா அணிகள் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் வெற்றி பெற்றன.
நேற்றைய முதல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. ஆனால் கொல்கத்தா அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
இதேபோல் நேற்றிரவு மொகாலியில் நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆம்லாவின் அதிரடி சதத்துடன் பஞ்சாப் அணி 189 ரன்கள் எடுத்தது. ஆனால் ஸ்மித்தின் பொறுப்பான ஆட்டத்தால் 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 192 ரன்கள் எடுத்து குஜராத் வெற்றி பெற்றது.
இன்று ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் ஐதராபாத்தில் மோதவுள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.