shadow

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை எவை?

கடந்த சில நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது அடுத்தகட்டத்திற்கு வரவுள்ளது. லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்று சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இப்போதைக்கு மும்பை அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு உறுதியாக நுழைந்துள்ளதாக கூறலாம். அந்த அணி 18 புள்ளிகள் பெற்றுள்ளது. அதனையடுத்து கொல்கத்தா மற்றும் புனே அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் ஐதராபாத் அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளதால் இந்த அணி இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கொல்கத்தா மற்றும் புனே அணியை பின்னுக்கு தள்ளிவிடும்.

மேலும் பஞ்சாப் அணி 12 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தாலும் நல்ல ரன்ரேட்டுடன் இன்னும் இரண்டு போட்டிகளில் அந்த அணி விளையாடவுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. எனவே இனிவரும் போட்டிகளில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் குஜராத், டெல்லி, பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply