shadow

pepsi-ipl-20152015ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரம் 8ஆம் தேதி முதல் மே24ஆம் தேதி வரை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இம்முரை சென்னை அணி பங்கேற்கும் ஆட்டங்கள் சென்னையிலேயே நடைபெறும் என பி.சி.சி.ஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் 8-வது சீசனுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம்  8ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட மூன்று கேலரிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது  குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், பிரச்சனைக்குரிய அந்த மூன்று கேலரிகளை தவிர மற்ற அனைத்து கேலரிகள் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.  

3 கேலரிகளை பயன்படுத்தாததால் போட்டிகளை சுமார்11 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் காணும் வாய்ப்பையும் இழக்கின்றனர். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிகளை வேறு நகரத்துக்கு மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டி சென்னையிலேயே நடைபெறும் என்று

Leave a Reply