shadow

ஜல்லிக்கட்டு கலவரத்தை விசாரிக்க விசாரணை ஆணையம். முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 36 மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் ஓபிஎஸ் நேற்று அறிவித்த நிலையில் இன்று இந்த வன்முறை குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டார். அதில் சென்னை மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரணை செய்ய தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை ஆணையத்திற்கு ஒய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மூன்று மாதங்களில் இதுகுறித்து விசாரணை செய்து அரசிற்கு அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் முதல்வர் ஓபிஎஸ் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

Leave a Reply