shadow

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. இதன்படி நேற்று இந்தியா மட்டுமின்றி உலகின் பல நகரங்களிலும் முதலாவது யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் யோகாவின் மகத்துவத்தை உணரந்து லட்சக்கணக்கானோர் யோகா செய்வதில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.

புதுடில்லி தொடங்கி தாய்லாந்து, மலேசியா, தைவான், சீனா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பாரீஸ், ஆகிய நாடுகளில் உள்ள மக்களும், தலைவர்களும் யோகாவில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் யோகாவில் ஈடுபட்ட மக்களின் அற்புதமான புகைப்படங்கள் இங்கு தொகுத்து நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. அதை பார்த்து ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

shadow

Leave a Reply