பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்பட பல தலைவர்கள் பங்கேற்கவுள்ள சர்வதேச ஆசியன் அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த கூட்டம் இலங்கையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தேசிய செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான முரளிதர ராவ் மற்றும் அக்கட்சியின் வெளிநாட்டு விவகார அழைப்பாளர் விஜய் ஜொலி ஆகியோர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசியான் சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அதிபர் ராஜபக்சே உரையாற்றயுள்ளார். இந்த கூட்டத்தில் 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
ராஜபக்சே பங்குபெறும் கூட்டத்தில் பாஜக தலைவர்கள் கலந்துகொள்வதால் தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.