shadow

gujarat templeமும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட லக்வியை கடந்த வாரம் பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்ததை  அடுத்து இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது லக்வி மீண்டும் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

குஜராத்தில் உள்ள பழம்பெரும் இந்து கோவில்களை தாக்க லக்வியின் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுருப்பதாக இந்திய புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து குஜராத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 3 கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கோவில்களில் துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும், பக்தர்கள் சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் குஜராத் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள இந்து கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply