டெல்லியிலுள்ள திஹார் சிறையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்பட பல்வேறு குற்றங்கள் செய்த குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை விடுவிக்க தீவிரவாதிகள் திஹார் சிறையை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை காரணமாக திஹார் சிறைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் பாகிஸ்தான் நாட்டின் ராணுவப்பள்ளியில் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகளின் அடுத்த குறி திஹார் சிறையாக இருக்கலாம் என்ற ரகசிய தகவலை அடுத்து உளவுத்துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே, 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட திஹார் சிறையில் தற்போது பல அடுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.