ஆர்.கே.நகரில் தகவல் தொழில்நுட்ப கல்லூரி. டிடிவி தினகரனின் காதில் பூசுற்றும் வாக்குறுதி
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். இந்த வாக்குறுதிகள் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது என்பதை கூட எண்ணி பார்க்காமல் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதுதான் வேதனை
இந்நிலையில் நேற்று இரவு ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்த சசிகலா அணியின் வேட்பாளர் தினகரன், ‘ தேர்தல் முடிவு வெளியான பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வே முடிந்துவிடும்’ என்று கூறினார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்றால் தகவல் தொழில்நுட்பத்துறையில் அப்பகுதி மாணவர்கள் சிறந்து விளங்க தகவல் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற நினைத்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த தினகரன், வரும் 15ம் தேதி தேர்தல் முடிவுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அரசியல் வாழ்வு முடிந்துவிடும் என்றார். தகவல் தொழில்நுட்ப கல்லூரி வாக்குறுதி குறித்து சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.