இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவில் ஈடுபட்ட 3 பெண்களுக்கு சவுக்கடி தண்டனை
திருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவு புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மூன்று பெண்கள் உள்பட பலருக்கு ஒரே நேரத்தில் சவுக்கால் அடிக்கும் தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் இந்தோனேஷியாவில் வழங்கப்பட்டுள்ளது. தண்டனை நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியா நாட்டில் திருமணத்திற்கு முன்னர் ஆண்களும், பெண்களும் செக்ஸ் உறவு கொள்வது கடும்குற்றம் என அந்நாட்டு மதத்தின் சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் திருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவின் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி வழங்கும் தண்டனை வழங்கப்பட்டது.
இவர்களில் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் அனைவருக்கும் வெள்ளை உடை வழங்கப்பட்டு அவர்கள் முழங்காலிட்டு உட்கார வைக்கப்பட்டனர். பின்னர் இரண்டு அதிகாரிகள் மாறி மாறி சவுக்கால் அடித்து தண்டனையை நிறைவேற்றினர். இந்த அதிர்ச்சி புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்,டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.