தீவிரவாத இயக்கங்களுக்கு உதவும் செயலிகள்: இந்தோனேஷியா அதிரடி முடிவு
தீவிரவாத இயக்கங்களுக்கு சாதகமாக இயங்கி வரும் செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று இந்தோனேஷியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்து சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘டெலிகிராம்’ என்ற செயலிக்கு இந்தோனேஷிய அரசு தாஇ விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதேபோல் வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்தும்போது பரிமாறிக்கொள்ளும் தகவலைக் கண்காணிப்பதில் சிரமங்கள் உள்ளதாகவும், இதன் காரணமாக வாட்ஸ் அப் உள்ளிட்ட ஒருசில செயலிகளை முடக்க இந்தோனேஷிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.