தமிழக பொறுக்கிகளுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் ஆபத்து. சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சைக்கருத்து
‘தமிழக பொறுக்கிகளை குறி வைத்து பாகிஸ்தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 6 பேர் சென்னைக்குள் நுழைந்து இருப்பதாக’ பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கூறியுள்ளது தமிழக இளைஞர்கள் இடையே பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாமிக்கு எதிராக இளைஞர்கள் கடும் விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கி என விமர்சனம் செய்த சுப்பிரமணியம் சுவாமி, அதன் பின்னர் பல சமயங்களில் தனது டுவிட்டரில் பொறுக்கி என்றே குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் தனது டுவிட்டரில் ‘ராஜஸ்தான் எல்லை வழியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் 6 பேர் சென்னைக்குள் நுழைந்துள்ளனர். தமிழக பொர்க்கிகளை குறிவைத்து இவர்கள் சென்னைக்குள் நுழைந்துள்ளனர்” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றுக்கட்சியாக பாஜக தலையெடுக்கும் வரை, இந்து அமைப்பு போராளிகளான எங்களுக்கு அதிமுகவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கமல்ஹாசனை குறிவைத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் சுவாமி, இன்று மீண்டும் தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்துள்ளதால் தமிழக மக்கள் அவர் மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.