வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30: இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-30 இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ஜிசாட்-30 என்ற இந்த செயற்கைக்கோள் பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் என்ற ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயப்பட்டால் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு மிகுந்த பயனளிக்கும்.

3,057 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் DTH, டிஜிட்டல் சேவை உள்ளிட்டவைகளுக்கு உதவும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply