அடாரி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் வாகா பகுதியில் உள்ள இந்தியா,பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி தலைமையிலான இந்திய வீரர்கள்,

பாகிஸ்தான் ரேஞ்சர் விங் கமாண்டர் முகமது அசீர் கான் தலைமையிலான வீரர்களுக்கு இனிப்பு கூடையை வழங்கினர். பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள், இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானிய இனிப்பு பார்சலை வழங்கினர்.

Leave a Reply