shadow

shadow

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனுக்கு வால் முளைத்துள்ளதால் அவனை அனுமாரின் அவதாரம் எனக்கூறி அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் அர்ஷித் அலிகான் என்ற 13 வயது சிறுவனுக்கு முதுகுக்கு கிழே 7 இன்ச் அளவில் வால் ஒன்று முளைத்துள்ளது. சிறுவயதில் சிறியதாக இருந்த இந்த வால் நாள் ஆக ஆக பெரிதாக வளர்ந்து தற்போது 13 இன்ச் அளவில் இருக்கின்றது.

அர்ஷித் அலிகானின் பெற்றோர்கள் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும், அவன் அனுமாரின் மறு அவதாரம் என்று நம்புகின்றனர். அந்த பகுதி மக்களும், அந்த சிறுவனுக்கு கடவுள் போன்று உடைகளை அணிவித்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், இது சாதாரணமானதுதான் என்றும், இதை சர்ஜரி செய்து அகற்றிவிட்டாலும், சிறுவனுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று கூறியும் சிறுவனுக்கு சர்ஜரி செய்ய பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

Leave a Reply