விமானம் தாங்கி போர்க்கப்பலான, ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா நம் இந்திய கடற்படையில், நேற்று சேர்க்கப்பட்டது.
இதற்காக இந்திய ராணுவ அமைச்சர், அந்தோணி மற்றும் கடற்படை உயரதிகாரிகள், ரஷ்யா சென்றனர்.
கப்பலை, இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கும் நிகழ்ச்சி, ரஷ்யாவின் செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்தது.ரஷ்யா துணை பிரதமர், டிமிட்ரி ரொகாஜின் இந்த கப்பலை இந்திய கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில், கையெழுத்திட்டு இந்திய ராணுவ அமைச்சர் அந்தோணியிடம், அதை கொடுத்தார்.
இதன்மூலம் இந்திய கடற்படையின் பலம், மேலும் அதிகரித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.