shadow

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் புதிய மாற்றம்: இந்திய அணி முடிவு

தென்னாப்பிரிக்காவுக்கு சமீபத்தில் சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்றது. எனவே இனிவரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் முதலில் ஒருநாள் மற்றும் டி20 தொடர் விளையாடிய பின்னர் கடைசியாக டெஸ்ட் தொடரை விளையாட இந்திய அணி, தொடருக்கான திட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளது.

வெளிநாடுகளில் விளையாடும்போது போதிய பயிற்சி வேண்டும் குறிப்பாக டெஸ்ட் தொடரை வெளிநாடு சென்ற உடனே விளையாடுவது ரிஸ்க் ஆனது. எனவே ஒருநாள், டி20 தொடரை முதலில் விளையாடிய பின்னர் கடைசியாக டெஸ்ட் தொடரை விளையாட இந்திய அணி முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு நல்ல பயனளிக்கும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply