shadow

சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் திடீர் மாயம். 29 பேர் கதி என்ன?

air-forceஇந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. கடல் நடுவே பறந்து கொண்டிருந்த இந்த விமானம் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று காலை சுமார் 9 மணி அளவில் அந்தமான் போர்ட்பிளேருக்கு புறப்பட்டுச் சென்ற AN-32 என்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் 29 பேருடன் புறப்பட்டுச் சென்றது. ஆனால் அந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ந்து விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் விமானத்தில் சென்ற 29 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கப்பல்படையினர் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply