இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று வங்கதேசத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் முரளி விஜய், வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி வருகின்றனர். முரளிவிஜய் 40 ரன்களும், தவான் 76 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். பிற்பகல் 3.15மணி நிலவரப்படி இந்திய அணி 26.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக 24வது ஓவரை விளையாடியபோது மழை குறுக்கிட்டதால் சுமார் நான்கு மணி நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.