shadow

ரசிகர்கள் ஆத்திரத்தால் இந்தியா-இலங்கை போட்டி திடீர் நிறுத்தம்.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று கண்டி நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 217 ரன்கள் எடுத்தது.

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விரட்டி இந்திய அணி ஆரம்பத்திலேயே தவான், விராத்கோலி விக்கெட்டுக்களை இழந்தாலும் பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா-தோனி கூட்டணி வெற்றியை நோக்கி வீர நடை போட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக 44 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கை ரசிகர்கள் ஆத்திரத்தில் மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் போட்டி தற்காலிக நிறுத்தப்பட்டது. இருப்பினும் பின்னர் போட்டி மேலும் தொடராமல் இருந்தாலும் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply