shadow

டி-20 போட்டியிலும் வெற்றி! ஒரு போட்டியை கூட வெல்லாத சோகத்தில் இலங்கை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் கிரிக்கெட் போட்டியில் டெஸ்ட், ஒருநாள், டி-20 ஆகிய மூன்று தொடர்களையும் வென்றது மட்டுமின்றி ஒரு போட்டியில் கூட இந்தியா தோல்வி அடையாமல் வெற்றி நடையுடன் நாடு திரும்பவுள்ளது

இன்றைய டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஆக்ரோஷத்துடன் விளையாடி 170 ரன்கள் எடுத்தது. ஆனால் 171 ரன் இலக்கை ஒரு பொருட்டாக மதிக்காத இந்தியா 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி 82 ரன்களும், பாண்டியா 54 ரன்களும் எடுத்தனர்.

இந்த தோல்வி மட்டுமின்றி இந்த தொடரில் ஒரு வெற்றியை கூட ருசிக்க முடியாத சோக நிலையில் இலங்கை உள்ளது. இலங்கையின் தொடர் தோல்வியால் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

Leave a Reply