shadow

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக். இந்தியா சாம்பியன்

இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நிதாஹாஸ் கோப்பையின் நேற்றைய இறுதியாட்டத்தில் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ரன்கள் எடுத்தது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியால் இலக்கை நெருங்கியது. இருப்பினும் கடைசி இரண்டு ஓவர்களில் 36 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டபோது தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ், அவரை நேற்றைய ஆட்டநாயகனாக ஆக்கியது.

இந்திய அணியில் இடம்பெற்ற இரண்டு தமிழர்களான தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாகவும், வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டதில் தமிழர்களுக்கு பெருமைதான்.

Leave a Reply