shadow

முதல் டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி! சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் போட்டி தொடரை 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்ற நிலையில் தற்போது டி-20 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ரன்கள் குவித்தது.

204 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்து. 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி-20 போட்டி வரும் 21ஆம் தேதி சென்சுரியன் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply