shadow

2வது டி-20 போட்டி: இந்திய அணி தோல்வி

தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரையும், டி-20 தொடரின் முதல் போட்டியையும் வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ரன் ஏதும் அடிக்காமலும், கேப்டன் விராத் கோஹ்லி ஒரு ரன்னிலும் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். இருப்பினும் மணிஷ் பாண்டே 79 ரன்களும், தோனி 52 ரன்களும் எடுத்ததனர். இறுதியில் இந்திய அணி20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 18.4 ஓவர்களீல் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி 64 ரன்களும், க்லேசன் 69 ரன்களும் எடுத்தனர். க்லேசன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

தொடரை வெல்லும் 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி வரும் 24ஆம் தேதி கேப்டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply