மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது போட்டி: இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்தது. ரஹானே 72 ரன்களும், தோனி 78 ரன்களும் ஜாதவ் 40 ரன்களும் குவித்தனர்.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் மற்றும் குல்தீப் நாயர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், பாண்ட்யா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர். தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.