shadow

2வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி. ஜிம்பாவே ஏமாற்றம்

cricketஜிம்பாவே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, முதல் ஒருநாள் போட்டியில் த்ரில் வெற்றியை பெற்றதை அடுத்து நேற்று இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஜிம்பாவே அணி, முதலில் பீல்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. 272 ரன்கள் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி,  49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 72 ரன்கள் எடுத்த இந்திய அணியின் முரளிவிஜய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

ஸ்கோர் விபரம்:  இந்தியா 271/8    50 ஓவர்கள்

ரஹானே        63
முரளிவிஜய்    72
ராயுடு        41
பின்னி        25

ஜிம்பாவே அணி    209/10    49 ஓவர்கள்

ஷிஹாபா    72
முதும்பாமி    32
கிரீமர்        27
வில்லியம்ஸ்    20

Leave a Reply